Sunday, April 12, 2009

இந்த நாளும் கடந்து போகும்


சொந்த மண்ணும் களவு போகும்
உற்ற உறவும் அற்றுப் போகும்
பெற்றப் பிள்ளை களத்தில் சாகும்
எத்துணை உயிர்கள் தொலைந்து போகும்
எந்த னினமும் அழிந்து போகும்!!

அந்த நாளும் கடந்து போகும்
இந்த நாளும் கடந்து போனால்…
அந்த நாளும் கடந்து போகும்!

எந்த நாடும் உடைந்து போகும்
சங்கெ டுத்து முழங்கிப் போனால்…
எந்த நாடும் உடைந்து போகும்!

சிங்க தேசம் உறைந்து போகும்
இந்த தேசம் உயிர்த்து நின்றால்…
சிங்க தேசம் உறைந்து போகும்!

அந்த நாளும் கடந்து போகும்
இழந்த தேசம் நமது ஆகும்!
ஈழத் தேசம் மலர்ந்து போகும்!

எந்த நாளும் கடந்து போகும்!
இந்த நாளும் கடந்து சென்றால்...
எந்த நாளும் கடந்து போகும்!

1 comment: