Friday, June 26, 2009

தொலைத்துவிட்டேன்

தொடர்ந்து சென்றேன்
தொட்டு விடவில்லை!

தொலைந்தன
தூரங்களும் நேரங்களும்

தொலைத்துவிட்டேன்
வருத்தங்கொண்டேன்

அவள் வீடு வந்தது!

Tuesday, June 2, 2009

நானும் ஆத்திகனானேன்!!!

எம் தலைவன்
நேற்று வரை போராளி
இன்று முதல்
இனம் காக்கும் இறைவன்

இல்லையென்பவர்க்கு இல்லை!
உண்டென்பவர்க்கு உண்டு!
நானும் ஆத்திகனானேன்!

நாளும் பூசை செய்கிறேன்!
எப்போது தோன்றுவாயென்றே
ஆசை கொள்கிறேன்!