அய்யகோ
அய்யகோ
என் செய்வ
தய்யகோ!
கொய்வதோ
கொய்வதோ
எம்மினத் தலைகளை
கொய்வதோ?
செய்வதோ
செய்வதோ
இவ்வரச படைகள்
செய்வதோ!
மெய்யதோ
மெய்யதோ
வந்த சேதி
மெய்யதோ?
உரியதோ
உரியதோ
உமக்கிது
உரியதோ?
வலியதோ
வலியதோ
எம்மினம்
வலியதோ!
கொடியதோ
கொடியதோ
எம் நோக்கு
கொடியதோ?
உரைப்பதோ
உரைப்பதோ
பொய்யினை
உரைப்பதோ?
முறையதோ
முறையதோ
உமக்கிது
முறையதோ?
குவியுதோ
குவியுதோ
பிணங்களிங்கு
குவியுதோ!
தணியுதோ
தணியுதோ
உன் வெஞ்சினம்
தணியுதோ!
இறையிதோ
இறையிதோ
நீர் கூறும்
இறையிதோ!
குறையதோ
குறையதோ
எம் உரம்
குறையதோ?
சரியுதோ
சரியுதோ
உம் பக்கஞ்
சரியுதோ!
புரியுதோ
புரியுதோ
இஃதுனக்கு
புரியுதோ!
புலியிதோ
புலியிதோ
காக்க வந்த
புலியிதோ!!
Wednesday, April 15, 2009
அய்யகோ அய்யகோ என் செய்வ தய்யகோ!
Subscribe to:
Post Comments (Atom)
அருமை
ReplyDeleteவாங்க! நன்றி!
ReplyDelete