மாட்டைக்காக்க
மனிதன் வந்தான்!
மனிதனைத் தாக்க
அரசு முனைந்தது!
மனிதனைக் காக்க
எளிய மனிதர் வெகுண்டு வந்தார்!
எளிய மனிதரை
அரசு பழித்தீர்க்க
மாடுகளாய் மனிதன்
எருமை மாடுகளாய்
மீண்டும் மனிதன்!!!
-எழுத்தாணி
படிப்பவர்க்கு கேள்வியாய்; படைப்பவர்க்கு வேள்வியாய்; எழுத்து!
அய்யகோ
அய்யகோ
என் செய்வ
தய்யகோ!
கொய்வதோ
கொய்வதோ
எம்மினத் தலைகளை
கொய்வதோ?
செய்வதோ
செய்வதோ
இவ்வரச படைகள்
செய்வதோ!
மெய்யதோ
மெய்யதோ
வந்த சேதி
மெய்யதோ?
உரியதோ
உரியதோ
உமக்கிது
உரியதோ?
வலியதோ
வலியதோ
எம்மினம்
வலியதோ!
கொடியதோ
கொடியதோ
எம் நோக்கு
கொடியதோ?
உரைப்பதோ
உரைப்பதோ
பொய்யினை
உரைப்பதோ?
முறையதோ
முறையதோ
உமக்கிது
முறையதோ?
குவியுதோ
குவியுதோ
பிணங்களிங்கு
குவியுதோ!
தணியுதோ
தணியுதோ
உன் வெஞ்சினம்
தணியுதோ!
இறையிதோ
இறையிதோ
நீர் கூறும்
இறையிதோ!
குறையதோ
குறையதோ
எம் உரம்
குறையதோ?
சரியுதோ
சரியுதோ
உம் பக்கஞ்
சரியுதோ!
புரியுதோ
புரியுதோ
இஃதுனக்கு
புரியுதோ!
புலியிதோ
புலியிதோ
காக்க வந்த
புலியிதோ!!
சொந்த மண்ணும் களவு போகும்
உற்ற உறவும் அற்றுப் போகும்
பெற்றப் பிள்ளை களத்தில் சாகும்
எத்துணை உயிர்கள் தொலைந்து போகும்
எந்த னினமும் அழிந்து போகும்!!
அந்த நாளும் கடந்து போகும்
இந்த நாளும் கடந்து போனால்…
அந்த நாளும் கடந்து போகும்!
எந்த நாடும் உடைந்து போகும்
சங்கெ டுத்து முழங்கிப் போனால்…
எந்த நாடும் உடைந்து போகும்!
சிங்க தேசம் உறைந்து போகும்
இந்த தேசம் உயிர்த்து நின்றால்…
சிங்க தேசம் உறைந்து போகும்!
அந்த நாளும் கடந்து போகும்
இழந்த தேசம் நமது ஆகும்!
ஈழத் தேசம் மலர்ந்து போகும்!
எந்த நாளும் கடந்து போகும்!
இந்த நாளும் கடந்து சென்றால்...
எந்த நாளும் கடந்து போகும்!
விழுதுகளே வாருங்கள்!
வேர்களாய் மாறுங்கள்!
துவக்குகள் சூழ்ந்திடினும்
துயரங்கள் துடைத்தெடுப்போம்
பிக்குகள் சபித்திடினும்
தனியாட்சி அமைத்தெடுப்போம்
துளிகளின்று ஒன்றானால்
தோல்விகளென்றும் வேறாகும்
விழுதுகளே வாருங்கள்!
வேர்களாய் மாறுங்கள்!!!